பாண் ஒரு இறாத்தலை 500 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரி அறவீடுகள் அதிகரிப்பு மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு ஆகியனவற்றை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது அவ்வாறான விலையில் பாணை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் வெதுப்பக உணவு பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நூற்றுக்கு 08 வீதமாக அறவிடப்பட்ட பெறுமதி சேர் வரியானது 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கு இரண்டரை வீதம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்படுவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது”, எனக் குறிப்பிட்டார்.