பயங்கரவாத தடைச் சட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பொலநறுவையில் முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய தினம்(27) பொலநறுவை பகுதியில் மக்களின் பேராதரவுடன் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கையெழுத்துப் போராட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இரா.சாணக்கியன், அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.