பகிரங்க மன்னிப்பு கோரிய நாமல்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தவறு செய்துவிட்டார் என தெரிவித்து மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.
திகாமடுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ய தீர்மானித்தமை தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விவசாயிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அந்த முடிவுக்கு கட்சி என்ற முறையில் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.