இலங்கையைச் சேர்ந்த பெண் கைது
குழந்தையொன்றை விற்க முயன்ற நிலையில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் நாட்டிலேயே இவ்வாறு இலங்கை பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
இந்தோனேஷிய பெண்ணொருவர் தனக்கு பணத் தேவை இருப்பதாக தெரிவித்து தனக்கு பிறந்த இரண்டு மாதங்களேயான ஆண் குழந்தையை விற்க முயன்றுள்ளார்.அவரின் இந்த செயற்பாட்டுக்கு உதவிய இலங்கை பெண் உட்பட்ட மூவர் 12,000 திர்ஹமிற்கு குழந்தை விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவித்து ஒன்லைனில் விளம்பரம் செய்துள்ளனர்.
குழந்தையை விற்க விளம்பரம்
இந்த விளம்பரம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த டுபாய் காவல்துறையினர் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், குறித்த குழந்தையை வாங்குபவர் போல் நடித்து சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மூவர் மீதும் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அளித்த தண்டனை
இதற்கமைய, மூவருக்கும் தலா 03 வருடங்கள் சிறைத்தண்டனையும் 4000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு மாத சிறைத்தண்டனையும் 1000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது