பல்கலைக்கழக விண்ணப்பங்கள்
2021 க்கான க.பொ.த தர உயர்தர பரிட்சை எழுதிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக சுமார் 93,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இவற்றில் சுமார் 45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.