முக்கிய பொக்கிஷங்கள்
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் முக்கிய பொக்கிஷங்கள் அரசர் சார்ல்ஸின் மனைவி கமீலாவிற்கு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராணியின் மறைவையடுத்து, அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் தற்போது அரசாட்சியை ஏற்றிருக்கிறார். இந்நிலையில், ராணியின் பொக்கிஷங்களாக கருதப்படும் கிரீடம், உள்ளிட்ட பாரம்பரிய நகைகள் யாருக்கு அளிக்கப்படும்? என உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்தது.
இந்நிலையில், இந்த நகைகளில் பெரும்பாலானவை சார்லஸின் மனைவி கமீலாவிற்கு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
வைர கிரீடம்
இந்த நகைகளில் முக்கியமானது இரண்டாம் எலிசபெத்தின் வைர கிரீடம். முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே ராணி அதனை அணிவார். இந்த கிரீடத்தை இதுவரையில் விக்டோரியா மகாராணி, அலெக்ஸ்சாண்டிரா, மேரி மற்றும் இரண்டாம் எலிசபெத் ஆகிய நான்குபேர் மட்டுமே அணிந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், சார்லஸ் தற்போது அரசாராகி இருப்பதால் இந்த கீரிடம் அவருடைய மனைவிக்கு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
அவருக்கு பிறகு, வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு இந்த கிரீடம் வந்துசேரும்.
அதாவது இங்கிலாந்து அரசராக வில்லியம் பதவியேற்கும் நாளில் கேட் மிடில்டன் இந்த கிரீடத்தை அணிவார் எனச் சொல்லப்படுகிறது.
1820 களில் அப்போதைய மன்னர் நான்காம் ஜோர்ஜ் இந்த கிரீடத்தை உருவாக்கினார். இதில் 23,578 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய மதிப்பு 8 லட்சம் பவுண்டுகள் ஆகும்.