எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க்கைச் செலவுத் தொகையாக 324 பவுண்டுகளைப் பெறுவார்கள் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உயர்ந்து வரும் உணவு மற்றும் எரிசக்தி விலைகளை சமாளிக்க உதவும் 650 பவுண்ட் மானியத்தின் இரண்டாவது பகுதியாகும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி தெரிவு செய்யப்பட்ட பலன் பெறுபவர்கள் அதனை நேரடியாக அவர்களின் வங்கி, கட்டிட சங்கம் அல்லது கடன் சங்கக் கணக்கில் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் செலுத்துதல் தானாகவே இருக்கும் எனவும், நவம்பர் 8 மற்றும் 23 க்கு இடையில் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பை பெற்றுள்ளது
அதிகரித்து வரும் வாழக்கைச் செலவால் ஊதிய உயர்வை வலியுறுத்தி பிரித்தானியா முழுவதும் உள்ளி முக்கிய நகரங்களில் பெரும் போராட்டம் அண்மைய நாட்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டன், எடின்பர்க், ஸ்வான்சீ மற்றும் லிவர்பூல் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் தற்போதைய முடிவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கைச் செலவுக் கட்டணங்களுக்கு பெற தகுதியானவர்கள் யார்
650 பவுண்ட் மானியம் என்பது பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான 1,200 பவுண்ட் அரசாங்க ஆதரவு தொகுப்பின் மிகப்பெரிய பகுதியாகும்.
இது அதிகரித்து வரும் விலை உயர்வு குறிப்பாக எரிசக்தி கட்டணங்களை சமாளிக்க உதவும்.
ஆனால் அதை எதற்காக செலவிட வேண்டும் என்பதில் எந்த விதியும் இல்லை.
ஒரு குடும்பம் யுனிவர்சல் கிரெடிட், வருமான அடிப்படையிலான வேலை தேடுபவர்களுக்கான கொடுப்பனவு, வருமானம் தொடர்பான வேலைவாய்ப்பு மற்றும் ஆதரவு கொடுப்பனவு, வருமான ஆதரவு, வேலை வரி கொடுப்பனவு, குழந்தை வரி மற்றும் கடன் ஓய்வூதிய கடன் நன்மைகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றால், 650 பவுண்ட் வாழ்க்கைச் செலவுக் கட்டணங்களை பெற தகுதி பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.