அதிபர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ரணில் விக்ரமசிங்க இந்த உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றில் விசேட உரை
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை இடம்பெறவுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சர்வதேச ஆதரவு தொடர்பில் அதிபர் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க விசேடஉரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக ஜகத் குமார மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.