கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த மாணவரே காணாமல் போயுள்ளார்.
கடவத்தை கணேமுல்ல பகுதியை சேர்ந்த மாணவனே காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விடுதிக்கு திரும்பவில்லை
குறித்த மாணவன் பல்கலைக்கழகத்தில் விடுதியிலிருந்து நேற்றிரவு வெளியேறியதாகவும் அவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பாக பொறியியல் பீடத்தில் கற்று வந்த மாணவர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் மகாவலி கங்கையிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.