Uncategorized

எனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் – மர்மநபர்கள் பின்தொடருகின்றனர்..! சுமந்திரன் பகிரங்கம்


நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய என்னையும் மற்றும் சாணக்கியனையும் இனந்தெரியாத நபர்கள் பின்தொடர்ந்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

EP BEY 2600 என்ற இலக்கமுடைய உந்துருளி

தொடர்ந்து கருத்துரைத்த அவர், “ நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் நண்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில் வெளியேறியிருந்தோம்.

இதன்போது எம் இருவரையும் உந்துருளி ஒன்று பின்தொடர்ந்து வருவதை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட EP BEY 2600 என்ற இலக்கமுடைய உந்துருளி ஒன்றே எம்மை பின்தொடர்ந்து வந்தது.

புலனாய்வாளர்களே பின்தொடர்ந்தனர்

இதுதொடர்பில் எமது பாதுகாப்பு அதிகாரிகள் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

காவல்துறை பொறுப்பதிகாரி அலோக்க பண்டார சிறிது நேரத்திற்கு பின்னர் எங்களது பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புலனாய்வாளர்களே எங்களை பின்தொடர்வதாக தெரிவித்தார்.

இந்த நேரத்தில் எங்கள் இருவர் சார்பிலும் நான் இந்த இடத்தில் முக்கிய கேள்வி ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றேன். எதிர்கட்சியில் உள்ளவர்களை ஏன் புலனாய்வாளர்கள் பின்தொடர்கின்றனர்.

புலனாய்வாளர்களுக்கு எவ்வாறு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட உந்துருளி வழங்கப்பட்டன என்கின்ற கேள்வியினையும் நான் முன்வைக்கின்றேன்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளினால் எங்கள் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ” எனக் குறிப்பிட்டார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *