Uncategorized

மீண்டும் தீவிர அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகிந்த – மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நாமல்!


சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கியுள்ளதோடு, பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டிருந்தார்.

மாற்றத்தை விரும்பும் பெரமுன

மீண்டும் தீவிர அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகிந்த - மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நாமல்! | Sri Lanka Podujana Peramuna Mahinda Politics


இந்தக் கூட்டத்தில் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

“தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்கிறது.

அத்துடன் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பங்களித்த இளம் தலைமுறையினரால் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *