மாமனார் ஒருவர் மருமகனை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹபரணை – சேனாதிரியாகம குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தகராறு
இதேவேளை, கெட்டஹெத்த ஹிங்குரஹேன பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் குறித்த சம்பவத்தில் உயிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மனைவியின் தந்தை இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், கொலையை செய்த சந்தேகநபரும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.