கைவிடப்பட்ட முட்டை உற்பத்தி
சுமார் 50% முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதித்தமையும் கால்நடை தீவன தட்டுப்பாடும் இதற்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு
இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கோழி இறைச்சியின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.