செய்திகள்

நாட்டில் ஏற்பட்ட சுனாமியினால் கோட்டாபய பதவிவிலகி, ரணில் மொட்டுக் கட்சியில் இணைந்தது மாத்திரமே நடந்துள்ளது


களுத்துறையில் நடைபெற்றக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உரையை வைத்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதே தெரிவதாக அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

முறைமை மாற்றத்தை (சிஸ்டம் சேஞ்ச்) கோரி நாட்டில் சுனாமி ஒன்று ஏற்பட்டது. இதனால் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகியதோடு, நாட்டைவிட்டும் வௌியேறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் கூறினார். 

எனினும், நாட்டு மக்கள் முறைமை மாற்றத்தைக் கோரியிருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டுக் கட்சியில் இணைந்துக்கொண்டது மாத்திரமே நாட்டில் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார். 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *