வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அந்தவகையில், நாளை ஞாயிற்றுக்கிழமை 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, இதுவரை காலமும் 2 மணிநேரம் 20 நிமிடங்கள் என நடைமுறைப்பட்டு வந்த மின்வெட்டு நேரம் இம்முறை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்வெட்டு
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்வெட்டு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.