மோசடி
கொழும்பில் வீதிகளில் மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளை மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வைத்திருந்ததால், அவரைக் கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
கைதான சந்தேக நபர் புறக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பணம் கொள்ளை
இந்த நடவடிக்கையில் ஈடுபடும் பெண்கள் சில காலமாக மக்களுடன் பயணிக்கும் போது அவர்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
இதன் காரணமாக கொழும்புக்கு வருகாய் வருகைதருவோரை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.