மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் வீதியில் நின்றுகொண்டிருந்தவர் மீது பேருந்து மோதியதில் காத்தான்குளம் பகுதியை சேர்ந்த 74 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது பலத்த காயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் அந்நபர் உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
பேருந்து சாரதியும் நடத்துனரும் விபத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் முரண்பாடு
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பிரதேச மக்களும் விபத்து இடம்பெற்ற இடத்தில் முரண்பட்டதால், விபத்துடன் தொடர்புடைய பேருந்தை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் பின்னர் குறித்த பேருந்து சம்பவ இடத்திலிருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மன்னார் தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.