Uncategorized

முதலாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்..! நாடாளுமன்ற அமர்வு (நேரலை)


2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) இன்று (18.10.2022) நாடாளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்படவுள்ளது.


இந்த வாரத்துக்கான நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.



வாய்மூல கேள்வி விடைக்கான நேரம்


நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.




இதற்கமைய இன்று மு.ப 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியுள்ளதுடன் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.



அத்துடன் பி.ப 5 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *