Uncategorized

கொழும்பில் கோர விபத்து..! சம்பவ இடத்தில் தாயும் மகனும் பலி


கொழும்பு குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று கனரக வாகனத்துடன் மோதியதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.



பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடை தாய் மற்றும் அவரது 18 வயதுடைய மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்து பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

கொழும்பில் கோர விபத்து..! சம்பவ இடத்தில் தாயும் மகனும் பலி | Accident Police Investigating Srilanka

விபத்து தொடர்பில் கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அலவ்வ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *