பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் மூன்று பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டு பகுதியில் தமிழக பொலிஸாரால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் மன்னாரில் இருந்து படகு மூலம் அங்கு சென்றுள்ளதோடு, தமிழக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்