
வவுனியா செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் தட்டாங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த கன்டர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ரங்கெத்கம பகுதியைச் சேர்ந்த நந்தன கிருசாந்த (வயது – 41) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசராணைகளை செட்டிகுளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.