
அமெரிக்க காற்று தரக் குறியீட்டுக்கு அமைய இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் காற்று மாசு முகாமைத்துவப்பிரிவு மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது.
இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் 100 முதல் 150 வீதமாக பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மார்ச் வரை நீடிக்கவுள்ள நிலைமை
இந்த நிலைமையானது அடுத்த சில தினங்களுக்கும் தொடர்ந்தும் காணப்படும் எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் வரை இந்த நிலைமையானது குறைவாக அல்லது அதிகமான நிலையில் நீடிக்கலாம் எனவும் காற்று மாசு முகாமைத்துவப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.