Uncategorized

பாராளுமன்றம் முன் பிக்குமார் போராட்டம் – 13 தீயிடப்பட்டது – பதற்றமும் அதிகரிப்பு

பாராளுமன்றம் முன் பிக்குமார் போராட்டம் – 13 தீயிடப்பட்டது – பதற்றமும் அதிகரிப்பு
பாராளுமன்றம் முன் பிக்குமார் போராட்டம் – 13 தீயிடப்பட்டது – பதற்றமும் அதிகரிப்பு


13ஆவது திருத்தத்திற்கு எதிராக கொழும்பில் தற்போது பிக்குமார் இணைந்து போராட்டம் முன்னெடுத்து வரும் பகுதியில் சற்றுமுன் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

13ஆவது திருத்தத்திற்கு எதிராக பிக்குமார் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.  

“இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்” என பிக்குமார் வலியுறுத்தியுள்ளனர். 

தேரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார் அவர்களை தடுக்க முற்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிக்குமாருக்கும் பொலிஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் பிக்குமாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பிக்குமாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “பிக்குமார் மீது கை வைக்க வேண்டாம், அவர்களுக்கான மரியாதையை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *